தனது அடுத்த படத்தில் ஹன்சிகாவை எதிர்பார்க்கும் சிம்பு

சிம்பு நடித்து வரும் வாலு, வேட்டை மன்னன் என இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் ஹன்சிகா.

இதனால் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவர்களுக்கிடையே காதல் தீ பத்திக்கொண்டதாக சில மாதங்களாக செய்திகள் கசிந்து வந்தன.

அந்த செய்தி சமீபத்தில் உறுதியானது. நாங்கள் காதலிக்கிறோம் என இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில், தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்திற்கு சில மாதங்களாவே கதாநாயகி தேடி வருகிறார்கள்.

ஆனால் தென்னிந்தியா, வடஇந்தியா என தேடியும் கதைக்கேற்ற கதாநாயகி சிக்கவில்லையாம்.

அதனால் ஹன்சிகாவையே இந்த படத்திலும் நடிக்க வைத்து விடுவோம் என்று பாண்டிராஜிடம் கருத்து கூறியிருக்கிறாராம் சிம்பு.

ஆனால், பாண்டிராஜ்க்குத்தான் அதில் உடன்பாடில்லையாம். அப்படி பாண்டிராஜ் சம்மதம் தெரிவித்தால், சிம்பு-ஹன்சிகா ஜோடிக்கு இது மூன்றாவது படமாகி விடும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :