தொடர்ந்து அத்துமீறி வருகின்ற இந்திய வீரர்களை ஹிந்தியில் மிரட்டிய சீனா!

ம்மு எல்லை கட்டுப்பாட்டு பகுதியான லடாக்கில் சீன துருப்புகள் மீண்டும் அத்துமீறி நுழைந்து, இந்திய வீரர்களிடம் ஹிந்தியில் எல்லையை விட்டு போக சொல்லி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய சீன எல்லை பகுதியின் லடாக், இந்திய எல்லை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. இந்த பகுதியில் சீன துறுப்புகள் தொடர்ந்து அத்துமீறி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 3ம் திகதி இரு நாட்டு படைகளும் கொடி அமர்வு பேச்சில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில் சீனப் படைகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு லே-லடாக் எல்லையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி அங்குள்ளவர்களை ஹிந்தி மொழியில் மிரட்டியுள்ளனர்.

மேலும் அங்கு இந்திய இராணுவம் வைத்திருந்த உயர் தொழில் நுட்ப கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது இந்திய இராணுவத்தினருக்கும் சீன இராணுவத்தினருக்கும் கடுமையான, வாக்குவாதமும் ஏற்பட்டதாம். இதனையடுத்து ஃபிளாக் மீட்டிங்கில் கேமாரா ஒப்படைக்கப்பட்டதாம்!

மேலே குறிப்பிட்ட சீனாவின் அராஜக கேமரா உடைப்பு சம்பவம், ஜூன் 17ஆம் திகதி தவ்லத் பெக் ஓல்டி என்ற இடத்திற்கு அருகில் உள்ள சுமூர் எல்லைப் பகுதியில் நடந்துள்ளது.

அது எங்கள் இடம் என்று சீனா கோரியுள்ளது. இதனை இந்திய உளவு அமைப்பு இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை இந்திய-திபெத்திய பொலிஸும் உறுதி செய்துள்ளது.

சீன அரசியலில் நடைபெறும் உள்குத்துதான் இத்தகைய ஊடுருவலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது மக்கள் விடுதலை இராணுவம் மற்றும் மக்கள் விடுதலை இராணுவ நேவி அமைப்புக்களுக்கு இடையே நடைபெறும் அதிகார மோதல்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் சீனா தெற்குக் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைந்து செயல்பட்டு வருகிறது. அதாவது கட்சியில் நான்தான் பெரிய ஆள் என்று நிரூபிக்க இத்தகைய ஊடுருவல்களும், ஆதிக்கங்களும் தேவைப்படுவதாக தெரிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :