கனரக டிப்பரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபரொருவர் படுகாயம்


க.கிஷாந்தன்-
ட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் இன்று (24.06.2020) மாலை கனரக டிப்பரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்களில் பயணித்த 76 வயதுடைய நபரொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து நோயாளர் காவு வண்டி ஊடாக அவர் உடனடியாக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நுவரெலியாவில் இருந்து அட்டன் ஊடாக, நோட்டன்பிரிட்ஜ் பகுதிக்கு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
" முன்னால் சென்ற வாகனமொன்று வலது பக்கம் திரும்புவதற்கான சமிக்ஞையை விடுத்ததால் நான் மோட்டார் சைக்களில் வேகத்தை குறைத்தேன். அப்போதே பின்னால் வந்த டிப்பர் மோதியது." -என்று மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பெண் தெரிவித்தார்.
குறித்த பெண்ணின் தந்தையே படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -