ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏடு தொடங்கிவைத்த மருதமுனை அக்பர் வித்தியாலய வித்தியாரம்ப விழா !



நூருல் ஹுதா உமர்-
ருதமுனை பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில், தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (29) காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.எச். அலி அக்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, புதிதாக பாடசாலையில் இணையும் மாணவர்கள் அன்புடனும் உற்சாகத்துடனும் வரவேற்கப்பட்டனர். அவர்களது கல்விப் பயணம் சிறப்பாகவும் ஒழுக்கமுடனும் அமைய வேண்டும் என்ற நோக்கில், ஆசிரியர்களால் வழிகாட்டல் உரைகளும் வாழ்த்துகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி டீ.எல். அப்துல் மனாப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஏடு தொடக்கி வைத்தார். மேலும் கௌரவ அதிதி, விசேட அதிகளாக கல்விமான்கள் கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். சிறுவர் நட்பு சூழலில் கல்வியை ஆரம்பிக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :