பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தொண்டர்கள் காலை முதல் களப்பணியில் மழையையும் பாராது பணியாற்றினர். பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா காலைமுதல் மாலைவரை களத்திலிருந்து அவ்வப்போது தேவையான ஆலோசனைகளை வழங்கி சுத்தப்படுத்தும் பணியை முன்னெடுத்தது விஷேட அம்ஷமாகும்.
வேலைத்திட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் சாய்ந்தமருதின் சோகமாகக் காணப்பட்ட தோணா, மாலையாகும்போது புதுப்பொலிவு பெற்றிருந்தது.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், சாய்ந்தமருதின் அழகுக்கு மெருகூட்டி வெள்ள காலங்களில் பிரதான வடிகானாகவும் பயன்படக்கூடிய இந்த தோணாவை கடந்தகால ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிக்கும் ஒரு இடமாக பாவித்தார்களே ஒழிய இதனை அழகுபடுத்தி ஊரின் பிரதான வடிகானாகவும் மக்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும் மாற்ற முற்படவில்லை. தேசிய மக்கள் சக்தியினராகிய நாங்கள், அரசாங்கத்தின் சக்தியைப் பயன்படுத்தி இந்த தோணாவை எழில்மிக்கதாக மாற்றி சாய்ந்தமருதுக்கு வனப்பூட்டுவோம் என்றார்.
தோணாவை அண்டியுள்ள மக்களும் இதனை அழகுடன் வைத்திருக்க ஒத்துழைப்பு நல்கவேண்டும். கழிவுகளை இதனுள்ளே இடுவதிலிருந்தும் தவிர்க்குமாறும் தூரத்திலிருந்து கழிவுகளை கொண்டுவந்து இடுபவர்கள் விடையத்தில் அவதானமாக இருக்குமாறும் அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.
இனிமேல் இந்த பிரதேசம் பொலிசாரால் கண்காணிக்கப்படும் என்றும் தவறு இளைப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவத்தார்.
குறித்த இந்த சுத்தப்படுத்தும் பணிக்கு கல்முனை மாநகரசபை, சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபை என்பன தங்களது வாகனங்களை வழங்கியதாகவும் அதற்காக அந்த சபைகளின் தலைவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் அக்கரைப்பற்று மற்றும் கல்முனை நீர்ப்பாசன திணைக்களங்களும் வாகனங்களை வழங்கியுள்ளதாகவும் அவற்றுக்கும் நன்றி தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ABS மற்றும் Pearl Construction ஆகிய தனியார் நிறுவனங்களும் வாகனம் மற்றும் இன்னோரன்ன உதவிகளையும் வழங்கியதாகவும் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் ஏ. பர்ஹான், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எஸ். இம்தியாஸ், இணைப்புச் செயலாளர் எஸ்.எம். ஆரிப், பிரிவின் கிராம சேவை உத்தியோகத்தர் எல். நாசர் மற்றும் கல்முனை மாநகர சபையின் சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே. காலித்தீன், பிராஜாசக்தி தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment