இன்று கல்முனைப் பிரதேசத்தில் வீதியை தாண்டிய கடல்! படகுகள் வெளியேற்றம்! மக்கள் அச்சத்தில்...



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனைப் பிரதேசத்தில் இன்று (27) வியாழக்கிழமை கடல் கொந்தளிப்பு காரணமாக சீறி எழுந்த அலைகள் வீதியை தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது.

மீனவர்கள் தமது படகுகளை அவசர அவசரமாக பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். கல்முனையின் கரையோர கடல் பகுதிகளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். குறிப்பாக பெரியநீலாவணை மருதமுனை கல்முனை. போன்ற கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு நிலையில் காணப்படுகிறது.

கடல் அலைகளின் சீற்றம் காரணமாக வீதீகளில் கடல் அலை பரவுவதோடு கடல் அரிப்பும் பாரியளவில் இடம்பெறுகிறது.
மீனவர்களது. மீன்பிடி படகுகள் யாவும் வீதிக்கு இழுக்கப்படுகின்றன. கடல் பகுதிகளை பார்வையிடச் செல்லும் மக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு பெரிய நீலாவணை பொலீசார். மக்களை அறிவுறுத்துவதை காணக்கூடியதாக இருந்தது. இன்று கல்முனையில். மழை சற்று குறைந்திருந்தாலும் காற்றின் வேகம். சற்று அதிகமாகவே காணப்படுகிறது. வெள்ள. நிலையும் தொடர்கிறது. மக்களது இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :