திருக்கோவிலில் இலவச அரிசி விநியோக ஆரம்ப நிகழ்வு



வி.ரி.சகாதேவராஜா-
ரசாங்கத்தின் இலவச அரிசி விநியோக நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் ( 2024.04.21) திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

அரசால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்திருந்தார்.

இவ்வாறு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.நிருபா கிராம பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் என்.கந்தசாமி சமுர்த்தி பிரிவில் தலைமைபீட முகாமையாளர் எம்அரசரெத்தினம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :