அரசாங்கத்தின் இலவச அரிசி விநியோக நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் ( 2024.04.21) திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
அரசால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்திருந்தார்.
இவ்வாறு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.நிருபா கிராம பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் என்.கந்தசாமி சமுர்த்தி பிரிவில் தலைமைபீட முகாமையாளர் எம்அரசரெத்தினம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment