புகையிரத வண்டியில் மோதி பெண்ணொருவர் பலி; மட்டக்களப்பு - சந்திவெளியில் சம்பவம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
புகையிரத வண்டியில் மோதி பெண்ணொருவர் மரணமடைந்துள்ள சம்பவமொன்று நேற்றிரவு (20) 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரத வண்டியில் சந்திவெளி பகுதியில் வைத்து பெண்ணொருவர் மோதி மரணித்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மரணமடைந்துள்ள பெண் தொடர்பான விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும், அப் பெண் 40 வயது மதிக்கத்தக்கவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மரணமடைந்த பெண்ணின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் விபத்தா? தற்கொலையா? எனும் கோணத்தில் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :