காரைதீவு விபுலானந்த மத்தியகல்லூரியின் தொழினுட்ப ஆய்வுகூடத்திறப்புவிழா நேற்று திங்கட்கிழமை அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் நடைபெற்றபோது கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சிங்காரவேலு தண்டாயுதபாணி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆய்வுகூடத்தைத் திறந்துவைத்தார்..
கௌரவ அதிதிகளாக த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் ஆகியோர் கலந்துசிறப்பிக்கின்றனர. விசேட அதிதிகளாக கோட்டக்கல்விப்பணிப்பாளர் பரதன்கந்தசாமி பாடசாலை அபிவிருத்திச்சபையின் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் எம்.ரவீந்திரன் பழையமாணவர்சங்கச் செயலாளர் வி.விஜயசாந்தன் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் எ.எம்.ஈ.போல் ஆகியோர் கலந்து சிறப்பிப்பதையும் காணலாம்.
படங்கள் - காரைதீவு குறூப் நிருபர் சகா.