பயங்கரவாத பொதுபல சேனா, தம்மை கொலை செய்ய முயற்சி -வட்டரெக்க விஜித தேரர்

ஹியாங்கனை பிரதேச சபையை நேற்று சுற்றிவளைத்த பயங்கரவாத பொதுபல சேனா, தம்மை கொலை செய்ய முயற்சித்ததாக ஜாதிக பல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் வட்டரெக்க விஜித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலிஸார் அங்கிருந்ததால் தான் உயிர் தப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மஹியாங்கனை பிரதேச சபையை நேற்று சுற்றி வளைத்த பொதுபல சேனா அமைப்பினர், விஜித தேரருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து விஜித தேரர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளிடம் இருந்து காப்பாற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது போன்று நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் என்னை காப்பற்றினர்.
என்னை காப்பாற்றிய பொலிஸார் பிரதேச சபையில் இருந்து என்னை வெளியில் அழைத்து வந்தனர்.

நான் தற்போது இருக்கும் இடத்தை கூறமுடியாது. மிகப் பெரிய அச்சத்தில் இருந்து வருகின்றேன். பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நேற்று நடைபெற்றதால், விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக நான் வந்தேன். என்னை உள்ளே செல்லவிடாது தடை ஏற்படுத்தினர். பொலிஸாரின் உதவியுடன் பின் வாசல் வழியாக பிரதேச சபைக்குள் சென்றேன்.

எனினும் சபையின் அமர்வுகளை நடத்த முடியவில்லை. ஒரு மணிநேரம் சபை ஒத்திவைக்கப்பட்டது. என்னால் உரை நிகழ்த்த முடியவில்லை.

நான் வெளியில் செல்ல சிரமமப்பட்டேன். பொலிஸார் மிகவும் கஷ்டப்பட்டு என்னை பிரதேச சபைக்குள் இருந்து வெளியில் அழைத்து வந்தனர்.

பிரதேச சபைக்கு வெளியில் பயங்கரவாத பல சேனா என்னை கொலை செய்ய காத்திருந்தது என்றும் வட்டரெக்க விஜித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :