ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் சுதந்திர தின நிகழ்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
லங்கையின் 74 ஆவது சுதந்திர தின சிறப்பு நிகழ்வு இன்று (4) ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில், ஆசிரியர் ஏ.ஜீ.அஸீஸுர் ரஹீமின் நெறிப்படுத்தலில் ஆசிரியர் மற்றும் மாணவர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான எம்.எம்.எம்.ராசிக், ஹபீப் றிபான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு கெடட் படையினரின் மரியாதையுடன் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இதில், சட்டத்தரணி ஹபீப் றிபானின் நிதிப்பங்களிப்பில் வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :