விக்பாஸ் நடிகை லோஸ்லியாவின் தந்தையின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் மும்முரம்.திருகோணமலையில்



எப்.முபாரக்-
லங்கையின் முண்ணனி ஊடக நிறுவனமொன்றின் செய்தி வாசிப்பாளரான லோஸ்லியா கடந்த வருடம் பிரபல்யம் அடைந்தார்.
கடந்த நவம்பர் மாதம் 15 ஆம்திகதி லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் 52 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளதாக லோஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்தார்.
லொஸ்லியாவின் தந்தையின் சடலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும், இலங்கை வெளியுரவு அமைச்சின் கண்கானிப்பின் கீழ் மேற்கொண்டு வருவதாகவும்,லொஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்தார்.
இலங்கைக்கு கொண்டு வரப்படும் லோஸ்லியாவின் தந்தையின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள் எனவும் லொஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்தார்.
சடலம் இலங்கைக்கு கொண்டு வரும் பட்சத்தில் திருகோணமலை அன்புவழிபுரம் பகுதியில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த வாரமளவில் லொஸ்லியாவின் தந்தையின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் எனவும் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் லொஸ்லியாவின் சித்தப்பா நம்பிக்கை வெளியிட்டார்.
லொஸ்லியா தற்போது கொழும்மிலுள்ள ஹோட்டலொன்றில் சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்,கடந்த 22 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாகவும் லொஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்தார்.

வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தினை பூர்வீகமாக கொண்ட லொஸ்லியா பின்னாளில் யுத்த சூழ்நிலை காரணமாக திருகோணமலை பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றதாகவும் மிகவும் கஸ்ட சூழ் நிலை காரணமாக லொஸ்லியாவின் தந்தை 2009 ஆம் ஆண்டு தொழில் வாய்ப்பு தேடி கனடாவுக்கு சென்றதாகவும் லொஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :