முடக்கப்பட்ட பிரதேசங்களை விடுவிப்பதா? இன்று தீர்மானம்

J.f.காமிலா பேகம்-

லங்கையில் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ள மற்றும் முடக்கப்படாத பிரதேசங்கள் குறித்து இன்று தீர்மானம் எடுக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் கூறினார்.

கோவிட் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முடக்கப்படாத பகுதிகள் என்பவற்றில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் எண்ணக்கை தொடர்பில் வார இறுதி நாட்களில் மதிப்பிட்டு தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.

தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முடக்கப்படாத பகுதிகளில் எவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள் என்பதை வார இறுதி நாட்கள் வரை மதிப்பிட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் குறித்து தீர்மானிக்கப்படும்.

அத்தோடு அடுத்த வாரமளவில் முடக்கப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும், அதற்கமைய இன்றைய தினம் தனிமைப்படுத்தல் குறித்த தீர்மானத்தை எடுக்கக்கூடியதாகவிருக்கும் எனவும் அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :