பதவிக்காக நான் கூக்குரலிடவில்லை. – ஜோன் அமரதுங்க விடாப்பிடி


J.f.காமிலா பேகம்-

க்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தாமே முற்றிலும் தகுதியானவர் என்று அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட உறுப்பினருமான ஜோன் அமரதுங்க தெரிவிக்கின்றார்.

ஊடகமொன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்காக போட்டியிடுகின்ற உறுப்பினர்களில்

முதலாவது பெயரில் தாமே இருப்பதாகவும், ஆனால் அந்தப் பட்டியலில் பலரும் தேசியப்பட்டியலைப் பெற தகுதியற்றவர்களாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக தாம் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், அதனால் தாம் தேர்தலில் தோல்வியடையவும் இல்லை என்பதால், தாமே அந்த வெற்றிடத்திற்குத் தகுதியானவர் என்றும் ஜோன் அமரதுங்க கூறுகின்றார்.

அந்த பதவி தன்னை தேடிவரும் என்றும், அப்பதவிக்காக தாம் கூக்குரலிடுவதோ அல்லது சண்டைசெய்வதோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :