தொழிற்சங்க துறவி வி.கே வெள்ளையன் 49 வது நினைவு தின நிகழ்வு அட்டனில் இடம்பெற்றது


நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா-

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் தொழிற்சங்க துறவியுமான அமரர் வி. கே. வெள்ளையனின் 49 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் 02/12/2020 அட்டனில் நடைபெற்றது

தொழிலாளர் தேசியசங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தலைமையில் சங்கத்தின் அட்டன் தலைமை காரியலயம் ,அட்டன் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றதுடன், டிக்கோயா தோட்டத்திலுள்ள அன்னரின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது

இந் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமாகிய பி.கல்யாணகுமார், பிரதி நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் , உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :