காட்டு யானை தாக்குதலால் உடைமைகளுக்கு சேதம் விளைவிப்பு..

ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானை- ஈச்ச நகர் கிராமத்தில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானை தங்களது குடியிருப்பு பகுதி உட்பட பல உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக வீட்டு உரிமையாளர் கவலை தெரிவிக்கிறார்.

குறித்த காட்டு யானை தாக்குதலானது நேற்று (27) இரவு நண்பகல் 1 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானையினால் தனது மலசலகூட குழி மற்றும் வாழை, பலா, தென்னை உட்பட பல பயிர்களை துவம்சம் செய்து விட்டு சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் .குடியிருப்பு பகுதியில் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் இருந்தே பாதுகாப்பற்ற சேதப்படுத்தப்பட்ட யானை வேலியினையும் தாண்டி வருவதாகவும் இதனால் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அதேவேலை தங்களது பாடசாலை செல்லும் பிள்ளைகளின் மன நிலையில் பயம் ஏற்பட்டு வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பயிர்களை நாசபடுத்துவது மட்டுமல்லாது தினமும் அச்ச சூழ் நிலையுடன் தூங்க வேண்டியுள்ளதாகவும் காலங்களை கழிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் குறித்த பகுதியில் வீதியில் மின் விளக்குகள் இன்மையாலும் இருள் சூழ்ந்த பகுதியாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்த மக்கள் மாலை நேரங்களில் இருந்து வெளியே செல்ல முடியாமலும் கஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் விவசாய பயிர்களும் அழிக்கப்படுவதாவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து யானையின் தாக்குதலில் இருந்தும் முறையான பாதுகாப்பான யானை வேலிகளை அமைக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :