மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கலாச்சார பேரவை கவிஞர் இமாம் ஹன்பல் அவர்களின் எழுத்துப்பணிகளை பாராட்டி கலைமதி விருதினை வழங்கி கெளரவித்துள்ளது.
பாடசாலைக் காலத்திலிருந்தே கலை இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்ட இமாம் ஹன்பல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப்பட்ட தமிழ் விஷேடநெறி ஆசிரியாக பணிபுரிந்து தற்பொழுது அதிபராக கடமையாற்றுகிறார்.
மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் விடத்தல்தீவு அலிகார் மஹா வித்தியாலயம்,புத்தளம் ஸாஹிறாக் கல்லூரி,ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
அகில இலங்கை சமாதான நீதவானும் அரச மொழிபெயர்ப்பாளருமான ஓய்வுபெற்ற ஆசிரியர் முஹம்மது இமாம் நூர்ஜஹான் தம்பதிகளின் புதல்வரான இமாம் ஹன்பல் அகில இலங்கை சமாதான நீதவான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -