கல்முனை பிரதேச இலக்கிய விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும்.

பி.எம்.எம்.ஏ.காதர்-

லாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கல்முனை பிரதேச செயலக கலாச்சாரப் பிரிவு நடாத்தும் பிரதேச இலக்கிய விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும் இன்று(14-12-2017) வியாழக்கிழமை பி.ப.2.00 மணிக்கு மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் கலந்து கொள்கின்றார்.கௌரவ அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ்,கணக்காளர் யு.எல்.ஜவாஹிர், எழுத்தாளர் உமா வரதராஜன்,கவிஞர் சோலைக்கிளி,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.ராஜதுரை ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

விஷேட அதிதிகளாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டீ.எம். றின்சான், கலாச்சார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.றிஸ்வான்,கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி வி.பற்பராசா,நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.எச்.மனாஸ்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் யு.எல்.பதியுதீன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்வில் கலை இலக்கியம்,ஓவியம்,அறிவிப்பு,சமூக சேவை மற்றும் ஊடகத்துறை சார்ந்த 31 பேர்; கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -