தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவர் இதுபோன்ற பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்யும் திட்டம் அவற்றில் ஒன்றாகும்.
இதன்போது அவர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு எனது உதவியை மஹிந்த நாடினார்.
பொலன்னறுவையில் அல்லது கிழக்கு மாகாணத்தில் வைத்து அவரைப் படுகொலை செய்யுமாறு என்னிடம் மஹிந்த ராஜபக்ஷ வேண்டிக்கொண்டார்.
எனினும் அவ்வாறு செய்தால் நான் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால் கொழும்பில் வைத்து மைத்திரிபாலவை படுகொலை செய்யும் திட்டமொன்றை நான் முன்வைத்தேன் அதனை மஹிந்த நிராகரித்தார்.
பின்னர் இருதரப்பின் இணக்கப்பாட்டுடன் கொழும்பை அண்மித்த பொரலஸ்கமுவையில் மைத்திரிபால சிறிசேன மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக பெண்ணொருவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்ட போதிலும், நூலிழையில் மைத்திரிபால சிறிசேன உயிர் தப்பிக் கொண்டதாக பிள்ளையான் இதன்போது தெரிவித்துள்ளார். aathavannews
