ஏறாவூரில் கர்பிணித்தாய்மார்களுக்கான போசாக்கு திட்டம் முதலமைச்சரினால் ஆரம்பம்!

15000 கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவைப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பான ஆரம்ப விழா இன்று காலை ஏறாவூர் அரபா வித்தியாலயத்தில் ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் விஷேட அதிதிகளாக ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.ஐ.தஸ்லீம், விவசாய அமைச்சர் துரைராஜ சிங்கமின் பாரியாரும் வைத்திய அதிகாரியுமான கலையரசி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிப்பிட்ட இன்றைய நிகழ்வில் 50 கர்பிணித்தாய்மார்களுக்கான போஷாக்குள்ள உணவுகள் அடங்கிய பொதிகள் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -