நவீன யுகத்­துக்­க­மைய அரச ஊழி­யர்கள் செயற்­பட வேண்டும் - ஜனா­தி­பதி

துளை, பழைமை யுகத்தை மாற்றி, நவீன தொழில்­நுட்­பங்­களைப் பயன்­ப­டுத்தி, மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை, உட­னுக்­குடன் நிவர்த்தி செய்யும் நவீன யுகம் ஏற்­பட்­டுள்­ளது. அரச ஊழி­யர்கள், உத்­தி­யோ­கத்­தர்கள் இந்­ந­வீன யுகத்­துக்­க­மைய செயற்­பட வேண்­டி­யது கட்­டா­ய­மாகும் என ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

மொன­ரா­கலை மாவட்ட செய­லக புதிய கட்­டிடத் தொகு­தியை, வைபவ ரீதி­யாகத் திறந்து வைத்­ததன் பின் நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்­து ­கொண்டு உரை­யாற்­று­கையிலேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;அரச உத்­தி­யோ­கத்­தர்­களின் இருண்ட யுகத்தை மாற்­றி­ய­மைத்து, அனைத்து வச­தி­களைக் கொண்ட புதிய கட்­டிடத் தொகு­தியில் நவீன கதி­ரை­களில் இருந்து நவீன தொழில்­நுட்­பங்­க­ளுடன் சேவை­யாற்­றக்­கூ­டிய சூழலை உரு­வாக்­கி­யுள்ளோம்.

பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் அரச செய­ல­கங்­களை நாடி­வரும் பொது­மக்­க­ளுக்கு சிறப்­பான சேவை­களை வழங்கி, அவர்கள் திரும்­பும்­போது சிரித்த முகத்­துடன் திருப்­தி­யுடன் செல்லும் நிலை ஏற்­பட வேண்டும். இதற்­கா­கத்தான் அரச ஊழி­யர்கள், உத்­தி­யோ­கத்­தர்கள் ஆகி­யோ­ருக்கு சகல வச­தி­க­ளுடன் தொழில் செய்­யக்­கூ­டிய சூழலை உரு­வாக்கி வரு­கின்றோம். இதனை உணர்ந்து அரச சேவை­யா­ளர்கள் செயற்­பட வேண்­டி­யது காலத்தின் தேவை­யா­க­வுள்­ளது.பொது­மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் அனைத்­தையும் அவர்கள் ஒரே கூரையின் கீழ் நிவர்த்தி செய்து கொள்ளல் வேண்­டு­மென்ற என்ற சிந்­த­னைக்­க­மை­யவே இந்த அரச செய­ல­கங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. ஏனைய அரச திணைக்­க­ளங்­களின் சேவை­களும், இந்த அரச செய­ல­கங்­க­ளுக்குள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

தமிழ், ஆங்­கிலம் ஆகிய மொழி­களைக் கற்­ப­தற்­கான அனைத்து வச­தி­க­ளையும் கிரா­மப்­பு­றங்­க­ளுக்கும் வழங்­கி­யுள்ளோம். இவ்­வாய்ப்­பு­களை முறை­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

ஈ கவுர்மன்ட் எமக்கு அறி­முகம் செய்து வைத்­துள்­ளதன் பேரில் பிறப்பு அத்­தாட்­சிப்­பத்­திரம் மற்றும் மரண சான்றிதழ் ஆகியவற்றை மூன்று நிமிடங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்று புதிய நவீன யுகத்துக்கேற்ப நாமும் எமது நிலையை மாற்றி அமைத்துக்கொள்ளல் வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :