உற்பத்தித்திறன் போட்டி-2013 இல் கல்குடா கல்வி வலயம் மூன்றாம் இடம்

த.நவோஜ்-

கிழக்கு மாகாண சபையினால் நடாத்தப்பட்ட 'உற்பத்தித்திறன் போட்டி-2013'இல் கல்வித் துறையில் கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுள் கல்குடா கல்வி வலயம் மூன்றாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற உற்பத்தி திறனுக்கான அதிசிறப்பு விருது வழங்கும் நிகழ்வில் மேற்படி விருது கல்குடா கல்வி வலயத்துக்கு வழங்கப்பட்டது.

இவ் விருதைப் பெற்றுக் கொள்வதற்கு உழைத்த வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களையும் கல்குடா கல்வி வலய சமூகம் மனதார பாராட்டுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :