ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இராஜினாமா

Share on

ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கே.எல்.அக்கீல் அர்சாத் என்பவர் தனது நகர சபை உறுப்பினர் பதவியை நேற்று(26.11.2012) இராஜினாமா செய்துள்ளதாக ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் கடந்த மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்காத நிலையிலிருந்த மேற்படி ஏறாவூர் நகர சபை உறுப்பினர்
 அக்கீல் அர்சாத் தனது நகர சபை உறப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாக தெரிவித்து இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக செயலாளர் ஹமீம் தெரிவித்தார்.

மேற்படி ஏறாவூர் நகர சபை உறுப்பினர் அக்கீல் அர்சாத் கடந்த ஏறாவூர் நகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவரின் ராஜினாமா தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் ஷேகுதாவூதிடம் கேட்டபோது ஏறாவூர் நகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதிய உறுப்பினர் ஒருவரை விரைவில் நியமனம் செய்யுமென தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :