காத்தான்குடி நோக்கி வந்த சொகுசு பஸ் லொறியில் மோதி விபத்து

Share on
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தியாவட்டுவான் பகுதியில் இன்று அதிகாலை (27.11.2012) 03.30 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் பஸ் நடத்துனர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பொருட்கள் ஏற்றி மட்டக்களப்புக்குச் செல்ல வந்த லொறி ஓட்டமாவடி – தியாவட்டுவான் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை கொழும்பில் இருந்து மட்டக்களப
்பு நோக்கி வந்த சொகுசு பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் பஸ்ஸின் சாரதி காயமடைந்துள்ளதாகவும் இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :