நரிப்புல் தோட்டம் நடேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.



நூருள் ஹுதா உமர்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆயித்தியமலை மட்/ நரிப்புல் தோட்டம் நடேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை பாடசாலையின் அதிபர் வேலுப்பிள்ளை மாதவன் தலைமையில்
இடம்பெற்றது.

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களுக்கான நிதிப்பங்களிப்பினை அவுஸ்ரேலியா சிட்னி நகரில் வசிக்கும் ராஜா சூப்பர் மார்க்கட் உரிமையாளர் வழங்கி இருந்தார்.மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிகவும் அதிகஷ்ட, தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் ஆயித்தியமலை மட்/நரிப்புல் நடேஸ்வரா தமிழ் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் (92) மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் சப்பிரமணியம் கணேஸ் அவர்களும், விஷேட அதிதியாக ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் அதிபர் ரி. வித்தியானந்தன், மற்றும் இன் நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய அவுஸ்ரேலியா சிட்னி ராஜா சூப்பர் மார்க்கட் உரிமையாளரின் சகோதரர் ஆர். தயாளன் மற்றும் கே.மனோகரன், ஆர். மனோநிலா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இணைந்த கரங்கள் அமைப்பு கல்விற்கான சேவையினை ஆரம்பித்து ஒரு வருடமானாலும் இன்றைய இப் பாடசாலையுடன் சேர்த்து நூறு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி அவர்களின் கல்விச் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான லோ.கஜரூபன், காந்தன், சி.துலக்சன், மா. ஜெயநாதன், சிருஸ்காந். சதீஸ்குமார், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :