சாய்ந்தமருது கிராம சக்தி சங்க பயனாளிகளுக்கான சுய தொழில் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வு



நூருல் ஹுதா உமர், ஏ.பி.எம்.அஸ்ஹர்-
கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது 02 ஆம் பிரிவிலுள்ள கிராம சக்தி சங்க பயனாளிகள் சிலருக்கான சுய தொழில் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக்கின் வழிகாட்டலுக்கமைய இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட் பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

இங்கு தெரிவு செய்யப்பட்ட 05 பயனாளிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.இதன் மூலம் இவர்களது சுய தொழில் முயற்சிக்கு ஊக்கமளிப்பதே பிரதான நோக்கமாகும்.சுய தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான கடன் திட்டத்தின் கீழேயே இக்காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திட்டமிடல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சமீம் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.பி.எம்.அஸ்ஹர், ஏ.ஜெமீல், எம்.ஐ.எம்.பஷீர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.இஹ்லாஸ் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :