அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளன தலைவரும், சமாதானத்துக்கான சமயங்களின் இலங்கை பேரவையின் அம்பாறை ம தலைவருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் தனது 80 ஆவது வயதில் நேற்று (24) சனிக்கிழமை காலமானார்.
சாய்ந்தமருது பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவராகவும் ஏனைய பல அமைப்புகளின் முன்னணி தலைவராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து இனமதபேதம் கடந்த பல சேவைகளை செய்தவர்.
இறுதியாக "தடங்களில் நினைவுகள் "என்ற சுயசரிதை நூலையும் வெளியிட்டவர் .
ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் சமுகத்தில் கண்ணியமாக பார்க்கப்பட்டவர் .
அன்னாரது இறுதி நல்லடக்கம் நேற்று(24) இரவு சாய்ந்தமருது மயானத்தில் நடைபெற்றது.
0 comments :
Post a Comment