"நான் தான் சிறப்பாக செய்தேன்" என்பதன் இரண்டாம் கட்டமே இன்றுள்ளது!-சஜித் பிரேமதாஸ



ரண்டு வருடங்களுக்கு முன்னர் பணத்தை இறைத்து செயற்கையாக கட்டமைக்கப்பட்ட பிரச்சாரப் பொறிமுறையின் ஊடாக மொட்டு முழு நாட்டையும் முட்டாளாக்கியதாகவும்,அந்த தந்திரத்தால் முழு நாடும் கண்மூடித்தனமாக ஏமாந்ததாகவும்,அதன் கோர விளைவாக வங்குரோத்து நாடு உருவாகியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இவ்வாறான போலி அரசியல் கட்டமைப்புடன் அதிகாரத்தை பெற்ற மாவீரன் இந்நாட்டை அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இன்று அதன் இரண்டாம் கட்டமாக பொம்மை ஆட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நான் தான் சிறப்பாகச் செய்தேன் எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி நாட்டை அழிவுக்குத் தள்ளினார் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இன்று அதன் இரண்டாம் கட்டம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டம் கெஸ்பேவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :