உள்ளூர் பயிர் செய்கைகளை மேம்படுத்த நீர் இரைக்கும் பம்பிகள் வழங்கி வைப்பு



ஹஸ்பர்-
திருகோணமலை-தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான நீர் இரைக்கும் பம்பிகள்,தையல் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வானது நேற்று (18) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து 03 மில்லியன் ரூபா பெறுமதியான "கமசமக பிலிசந்தரக்" வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தற்போதைய நிலையில் உள்ளூர் பயிர்ச் செய்கைகளை ஊக்கு விக்கவும் உற்பத்திகளை அதிகரிக்கவும் குறித்த பயனாளிகளுக்கு நீர் பம்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் 25 நீர் இரைக்கும் பம்பிகளும்,1 தையல் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது உரையாற்றிய பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தற்போதைய நிலையில் உள்ளூர் உணவு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் .மரவள்ளி வகை போன்றன செய்கையும் எமது பிரதேசத்துக்கு உகந்த நிலையில் உள்ளது இது போன்ற உற்பத்திகளை மேம்படுத்தவும் இது போன்றவற்றை பயன்படுத்தி பயன் பெறுமாறும் பயனாளிகளை கேட்டுக் கொண்டார்.

இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.நிஹாத் உட்பட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :