காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குள் மூன்றாவது பைஸர் தடுப்புசி!



அஸ்ஹர் இப்றாஹிம்-
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட காரைதீவு , மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசங்களைச் சேர்ந்த 20 வயதிற்கு மேற்பட்ட 2 வது தடுப்புசிகளைப் பெற்று 3 மாதங்கள் கடந்த ஆண் , பெண் இருபாலாருக்கும் மூன்றாவது பைஸர் தடுப்புசியினை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 16 ) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயம் ஆகியவற்றில் தடுப்புசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்கும், கொடிய கொவிற் 19 வைரசுவின் தாக்கத்திலிருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ளும் நோக்கிலும் இத் தடுப்புசி செலுத்தப்படவுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி .தஸ்லிமா பஸீர் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :