இறக்காமம் பிரதேச செயலகத்தில் காணிக்கச்சேரி !



நூருல் ஹுதா உமர்-
றக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, இறக்காமம் - 03, 05, 08 மற்றும் வரிப்பத்தான்சேனை - 03 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே காணிக்கச்சேரி நடாத்தப்பட்டிருந்தது. எனினும், குறித்த காணிக் கச்சேரிகளுக்கு தகுந்த காரணங்களினால் வருகை தராதவர்களுக்கான காணிக் கச்சேரி இன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் தலைமையில் இடம்பெற்றது.

இக்காணிக் கச்சேரிக்கு பிரதேச செயலகக் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவிற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதோடு, குறித்த பொது மக்களும் பங்குபற்றியதோடு தங்கள் காணிப் பிரச்சினை தொடர்பாக நேரடியாக உரிய அதிகாரிகளின் கவத்திற்கு கொண்டுவந்து தீர்வைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :