கல்முனையில் சேதன விவசாய பசளை உற்பத்தி நிலையம்!




னாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் அம்பாறை மாவட்டத்தில்,  சௌபாக்யா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சேதன விவசாய பசளை உற்பத்தி ஊக்குவிப்பு திட்ட நிகழ்ச்சிகள்; அம்பாறை மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்றுவருகின்றன.

விவசாய அமைச்சின்கீழுள்ள கமநலசேவைத்திணைக்களம், மாகாண மற்றும் மத்திய விவசாயதிணைக்களம் ,பிரதேச செயலகம் மற்றும் கால்நடைஅபிவிருத்திதிணைக்களம் என்பன இணைந்து இச்சேதனைப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களைநடைமுறைப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள கல்முனை கமநலசேவை பிரதேசத்தில் உள்ள ஆதம்பாவா ஜலீல் என்ற விவசாயின் காணியில் சேதன பசளை உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சொய்சா தலைமையில் நடைபெற்றது.

அங்கு சேதனைப்பசளைத் தொகுதி தயாரிப்பு சம்மந்தமான முழுமையான விளக்கமளிக்கப்பட்டதுடன் 40 அடிகளைக்கொண்ட மூன்று பசளை மேடைகளும் அமைக்கப்பட்டன. இந்நிகழ்வில் விவசாயப்போதனாசிரியர் நிஹார் உள்ளிட்ட விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களும் விவசாயிகளும் குழுமியிருந்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :