அம்பாறையில் மட்டுப்படுத்தப்பட்டஅளவில் மக்கள்வங்கிக்கிளைகள் இயக்கம்.



வி.ரி.சகாதேவராஜா-
மகால கொரோனா தாக்கத்தையடுத்து அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்கள் வங்கிக்கிளைகள் மட்டுப்படுத்தப்பட்டஅளவில் சேவைகளை மக்களுக்கு வழங்கிவருகிறது.

வாரத்தில் ஒரு கிளை இருநாட்கள் அல்லது 3நாட்கள் மாத்திரமே திறந்திருக்கும்.குறிப்பாக சிலகிளைகள் சில நாட்களில் மாத்திரமே திறந்திருக்கும். காலை 8.30மணிமுதல் பகல்11.45மணிவரை திறந்திருக்கும்.
எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இந்நடைமுறை அமுலில்இருக்குமென பிராந்திய முகாமையாளர் அறிவித்துள்ளார்.

இன்று(9) புதன்கிழமை அம்பாறை நிந்தவூர் சம்மாந்துறை மற்றும் திருக்கோவில் கிளைகள் திஙந்திருக்கும்.ஏனைய கல்முனை காரைதீவு மருதமுனைபோன்ற கிளைகள் திறக்கமாட்டாது.
நாளை(10) பென்சன் தினம். நாளை வியாழக்கிழமை பொத்துவில் உகன காரைதீவு கல்முனை போன்ற கிளைகள் திறந்திருக்கும் .நாளைமறுதினம்(11)வெள்ளிக்கிழமை அம்பாறை மஹாஓய சாய்ந்ததமருது அட்டாளைச்சேனை ஆகிய கிளைகள் மாத்திரமே திறந்திருக்கும்.

இதேவேளை இலங்கைவங்கியைப்பொறுத்தவரையில் அம்பாறை மற்றும் அக்கரைப்பற்றுக்கிகைள் மாத்திரமே இயங்கிவருகின்றன. ஏனைய கிளைகள் பூட்டப்பட்டுள்ளன.அதேபோல் தனியார் வங்கிகளும் பூட்டப்பட்டுள்ளன.

இதனை அனுசரித்து இன்றைய கொரொனா காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் நடக்கவேண்டிய நிலையிலுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :