இளைஞர் யுவதிகள் மத்தியில் கிரிக்கட் விளையாட்டுத்துறையை மேம்படுத்த அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னேடுத்து வருகின்றது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள
விளையாட்டு கழகங்களுக்கு
கடின பந்து உபகரணங்கள் வழங்கும்
நிகழ்வு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தகரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபாவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது
அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அதிதிகளாக ,
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களின் சட்ட ஆலோசகர் சிபான் மஹ்ரூப், கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிகாரி டொனி இப்ராஹீம்,
அமைச்சரின் கிரிக்கெட் விவகார இணைப்பாளர் டயஸ் ,றிஸ்வி முஸ்தபா வின் இணைப்பு செயலாளர் அல் ஜவாஹிர் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment