இன்று காரைதீவில் மாணவர் இருவருக்கு கொரோனா! 105 மாணவர் தனிமைப்படுத்தலில்: திங்களன்று பிசிஆர்.



காரைதீவு சுகாதார வைத்தியஅதிகாரி தஸ்லிமா
வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவில் இன்று இரு மாணவர்களுக்கு முதற்தடவையாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதனையடுத்து அவர்களோடு தொடர்பிலிருந்த மூன்று வகுப்புகளில் கற்கும் 105 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையில் பணியாற்றும் காரைதீவைச்சேர்ந்த 50 வயதுடைய முகாமைத்துவ உதவியாளர் ஒருவருக்கு கொரோனாத்தொற்று இனங்காணப்பட்டதாக நேற்று (21) வியாழனன்று பகல் எமக்கு அறிவிக்கப்பட்டது. அவரை வைத்தியசாலையிலிருந்தே மட்டக்களப்பிற்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
அதனையடுத்து நாம் உடனடியாக செயற்பட்டு அவரது வீட்டுக்குச்சென்று விசாரித்தபோது தமது 3 பிள்ளைகளும் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் கற்பதாகக்கூறினர்.

அவர்களை வரவழைத்து அன்ரிஜன் சோதனை செய்தபோது தரம் 11 மற்றும் தரம் 13 வகுப்புகளைச்சேர்ந்த அவரது மகனும் மகளும் கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 4 ஆம் வகுப்பைச்சேர்ந்த மூன்றாவது மகளுக்கும் தாய்க்கும் தொற்றில்லை என முடிவு வந்துள்ளது.தொற்றுக்கள்ளான பிள்ளைகளை மருதமுனை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மூன்று மாணவர்களும் பயிலும் 3 வகுப்புகளைச்சேர்ந்த 105 மாணவர்களையும் குடும்பத்தையும் நேற்றிலிருந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளோம். அவர்களில் குறித்த 3 மாணவர்களுடன் நெருங்கிப்பழகிய மாணவர்களை எதிர்வரும் திங்களன்று (25) பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

தேவைப்படின் அந்த வகுப்புகளுக்கான அவசியமெனக்கருதப்படும் ஆசிரியர்களையும் பி சிஆர் செய்ய திட்டமிட்டுள்ளோம். பாடசாலை மூடப்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. கல்முனை பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளருடன் ஆலோசனை செய்தே அத்தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

இதேவேளை இதுவரை கல்முனைப்பிராந்தியத்திற்குட்பட்ட காரைதீவுப்பிரதேசத்தில் இதுவரை 54 பேருக்கு தொற்றுறுதி இனங்காணப்பட்டுள்ளது.

இதுவரை காரைதீவில் 1666 பேருக்கு பி சி ஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றுமட்டும் 40 பேருக்கு பி சிஅர் அன்ரிஜன் செய்யப்பட்டது. இறுதியாக குறித்த 2 மாணவரும் மேலுமொருவருமாக 3பேர் இனங்காணப்பட்டிருந்தனர்.

மாளிகைக்காட்டைச்சேர்ந்த 25 பேர் தொற்றுக்கிலக்காகி சிகிச்சை பெற்றுவருகின்றனர். அனைவரும் ஓரிருநாட்களில் சிகிச்சைமுடிந்து வீடு திரும்பவுள்ளனர். ஏலவே 17 பேர் சிகிச்சையை பூர்த்திசெய்து வீடு வந்துவிட்டனர்.இன்னும் 36 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறுகின்றனர்.

எது எப்படியிருப்பினும் காரைதீவில் ஏற்பட்டுள்ள இத்தொற்றுக்கள் பரம்பலடையவில்லை மாறாக கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

இதுஇவ்வாறிருக்க மாணவர்கள் இவ்விதம் தொற்றுக்குள்ளானமை காரைதீவில் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (22) பாடசாலைகளுகக்கு வழமைக்கு மாறாக குறைவான மாணவர்களே சமுகமளித்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :