வைத்தியசாலையிலிருந்து தப்பிக்க முயற்சிசெய்த கொரோனா நோயாளி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலன்னறுவை – வெலிகந்த வைத்தியசாலையில் இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது.
28 வயது மதிக்கத்தக்க கொரோனா நோயாளி மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார்.
அவரை தடுக்க தாதி மிகுந்த சிரமப்பட்டதோடு ஓரிரு சந்தர்ப்பத்தில் அவர்மீது தாக்குதலையும் நடத்தியிருப்பதாக முறைப்பாடு பதிவாகியிருக்கிறது.
இந்த நிலையில் வெலிகந்த பொலிஸார் 30 வயதுடைய அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த சந்தேக நபராகிய தாதியை கைது செய்தனர்.
0 comments :
Post a Comment