கொரோனா நோயாளி மீது தாக்குதல்- வெலிகந்தையில் தாதியர் கைது



J.f.காமிலா பேகம்-
வைத்தியசாலையிலிருந்து தப்பிக்க முயற்சிசெய்த கொரோனா நோயாளி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலன்னறுவை – வெலிகந்த வைத்தியசாலையில் இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது.
28 வயது மதிக்கத்தக்க கொரோனா நோயாளி மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார்.
அவரை தடுக்க தாதி மிகுந்த சிரமப்பட்டதோடு ஓரிரு சந்தர்ப்பத்தில் அவர்மீது தாக்குதலையும் நடத்தியிருப்பதாக முறைப்பாடு பதிவாகியிருக்கிறது.
இந்த நிலையில் வெலிகந்த பொலிஸார் 30 வயதுடைய அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த சந்தேக நபராகிய தாதியை கைது செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :