கொரோனா பரவும் அதியுச்ச அபாய வலயமாக கொழும்பு மாவட்டம்


J.f.காமிலா பேகம்-

ம்பஹா மாவட்டத்திற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டம் கொரோனா வைரஸ் பரவும் தீவிர ஆபத்தைக் கொண்ட பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஷெனல் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் தினமும் 10000 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு முறையான சூத்திரம் பின்பற்றப்பட வேண்டும் என்பதுடன் அதனை தெளிவாக அரசாங்கம் அறிவிக்கவும் வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சுகாதார அமைச்சு, தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு மற்றும் கோவிட்-19 தொற்று ஒழிப்பு படையணி என்பன இணைந்து ஓரிடத்திலிருந்து செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :