திரையுலகில் 54 ஆண்டுகளாக தனக்கென்று தனி இடத்தை வைத்திருந்த பாலசுப்பிரமணியன் எண்ணிடலங்காத விருதுகளை வென்றவர். சாதனைகளின் உச்சங்களைத் தொட்டவர் என்றாலும் கூட, எளிமையை தனது அடையாளமாக்கி கொண்டவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கொரோனாவிலிருந்து மீண்டு விட்டார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடல்நலம் தேறி வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அவர் வரவில்லை; அவரது மறைவு செய்தி மட்டும்தான் வந்திருக்கிறது. உண்மையாகவே எஸ்.பி. பால சுப்பிரமணியத்தின் மறைவு அனைத்து மொழி திரையுலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு தான். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் ஒலிக்கும் வரை அவர் மக்களிடம் வாழ்ந்து கொண்டிருப்பார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் இம்போட்மிரர் ஊடக வலயமைப்பு.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் இம்போட்மிரர் ஊடக வலயமைப்பு.
0 comments :
Post a Comment