அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு


பாறுக் ஷிஹான்-
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாட்டினை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை(18) மாலை4.30 மணியளவில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர் சுடர் ஏற்றினார். தொடர்ந்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்ட சமூக சேவகர்கள் மெழுகுதிரிகளை எரித்து குறித்த வரலாற்று சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்கான பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.


அத்துடன் நிகழ்வில் மௌன பிராத்தனை முன்னெடுக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பேரவலம் தொடர்பாக பொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்படுவதன் ஊடாக ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச பொறிமுறையினூடாக நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அங்கு உரையாற்றிய அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -