முன்னாள் இராணுவத்தளபதியும், எம்.பியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு கடந்த அரசாங்கம் குத்தகை அடிப்படையில் வழங்கியிருந்த காணி ஒன்று தற்போதைய அரசாங்கத்தினால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு நாரஹேண்பிட்டி – கிரிமண்டல மாவத்தையில் உள்ள இந்த காணியில் முன்னாள் இராணுவத் தளபதியின் பாதுகாப்புப் பிரிவினர் தங்குவதற்காகப் பயன்படுத்தினர்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அப்போது மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க சமர்பித்து அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த காணி, காணி அபிவிருத்தி அதிகார சபையினால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதோடு அதற்கான கடிதமும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, போர்வெற்றி கொண்டாட்ட நிகழ்வாகிய கடந்த 11ஆம் திகதி இந்தக் கடிதம் முன்னாள் இராணுவத் தளபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.