போர்வெற்றி நாளில் பொன்சேகாவுக்கு கோட்டா கொடுத்த அதிர்ச்சி!


ஜே.எப்.காலா பேகம்-
முன்னாள் இராணுவத்தளபதியும், எம்.பியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு கடந்த அரசாங்கம் குத்தகை அடிப்படையில் வழங்கியிருந்த காணி ஒன்று தற்போதைய அரசாங்கத்தினால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு நாரஹேண்பிட்டி – கிரிமண்டல மாவத்தையில் உள்ள இந்த காணியில் முன்னாள் இராணுவத் தளபதியின் பாதுகாப்புப் பிரிவினர் தங்குவதற்காகப் பயன்படுத்தினர்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அப்போது மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க சமர்பித்து அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த காணி, காணி அபிவிருத்தி அதிகார சபையினால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதோடு அதற்கான கடிதமும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, போர்வெற்றி கொண்டாட்ட நிகழ்வாகிய கடந்த 11ஆம் திகதி இந்தக் கடிதம் முன்னாள் இராணுவத் தளபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -