யுவதியை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த ரிஷ்வானின் குடும்பத்தாருக்கு உதவி.

தலவாக்கலை பி.கேதீஸ்-

லவாக்கலை மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை செய்ய முயற்சித்து நீர்தேக்கத்தில் பாய்ந்த யுவதி ஒருவரை நீர்த்தேக்கத்தில் குதித்து யுவதியை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த ரிஷ்வானின் குடும்பத்தாருக்கு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் ரிஷ்வானின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு தமது இரங்கலை தெரிவித்தார்.

எத்தனையோ பிரச்சினைகள் ஆங்காங்கே நடக்கின்றன.பார்த்தும் பார்க்காததை போல செல்பவர்கள் சிலர், வேடிக்கை பார்ப்பவர்கள் சிலர், ஒரு சில நல்ல உள்ளங்கள் மட்டுமே மனித நேயத்துடன் செயற்படுவர்கள். அதிலும் தன்னுயிரை நீத்து பிற உயிரை காப்பாற்றுபவர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள். சகோதரரின் குடும்பத்திற்கு முடிந்த உதவிகளை இப்பொழுது மட்டுமில்லாமல் தேவையான எல்லா சந்தர்ப்பங்களிலும் செய்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். 
ஆனால் அவரின் இழப்பை நிச்சயமாக ஈடு செய்யவே முடியாது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -