சஜித் பிரமதாசவே பிரதமர் வேட்பாளர்- இம்ரான் எம்.பி

ஜித் பிரமதாசவே பிரதமர் என ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார் கிண்ணியா உப்பாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்பொழுது பெய்து வரும் தொடர்ச்சியான மழையால் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் இப்பகுதி மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பாரிய சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர். ஆனால் இதுவரை இந்த மக்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரமதாசவே பிரதமர் வேட்பாளர் எனஅண்மையில் நான் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடும் போது தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்த வாக்குகளை வைத்து பார்க்கும் போது எமக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 104தொடக்கம் 106 ஆசனங்களை பெறமுடியும்.

கட்சி என்ற ரீதியில் ஒற்றுமையாக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தி சிறந்த முறையில் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் போது எம்மால் 113 க்கு மேற்பட்ட ஆசனங்களை பெற முடியும். அதனை பெறுவதுக்கு எமக்கு தேவைப்படுவது ஜனாதிபதி தேர்தலில் பெற்றதை விட மேலதிக ஏழு இலட்சம் வாக்குகளே என தெரிவித்தார். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -