அரச விழாக்களில் அரசியல் பிரமுகர்கள் பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை

ஐ. ஏ. காதிர் கான்-

ரசாங்க விழாக்களில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு பிரசாரங்களை முன்னெடுத்தால், அதிகாரிகள் மீதே கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று முன் தினம் தெரிவித்துள்ளார். 
 
அடிக்கல் நடுதல், கட்டிடத் திறப்பு விழா போன்ற அரசாங்க நிகழ்வுகளில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது, தேர்தல் சட்ட விதிகளுக்கமைய தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் முடிவடையும் வரை அவ்வாறான நிகழ்ச்சிகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார. இதேவேளை, அரசியல்வாதியொருவரை அழைக்க நேரிட்டால், ஆகக்குறைந்தது இரண்டு தரப்பு அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளையாவது அழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுள்ளார். 

இதேபோன்று, அரசியல் கட்சிகளின் கொடிகளின்றி, தேசியக் கொடிகள் மற்றும் மாகாண சபைகளின் கொடிகளை பயன்படுத்துமாறும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -