அரசாங்க விழாக்களில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு பிரசாரங்களை முன்னெடுத்தால், அதிகாரிகள் மீதே கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று முன் தினம் தெரிவித்துள்ளார்.
அடிக்கல் நடுதல், கட்டிடத் திறப்பு விழா போன்ற அரசாங்க நிகழ்வுகளில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது, தேர்தல் சட்ட விதிகளுக்கமைய தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் முடிவடையும் வரை அவ்வாறான நிகழ்ச்சிகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார. இதேவேளை, அரசியல்வாதியொருவரை அழைக்க நேரிட்டால், ஆகக்குறைந்தது இரண்டு தரப்பு அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளையாவது அழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
இதேபோன்று, அரசியல் கட்சிகளின் கொடிகளின்றி, தேசியக் கொடிகள் மற்றும் மாகாண சபைகளின் கொடிகளை பயன்படுத்துமாறும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.