சிலோன் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 'தகவல் உரிமைச் சட்டம்' செயலமர்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நாளை சனிக்கிழமை (05) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள், சமூக ஊடக செயற்பட்டாளர்கள், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 75 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
செயலமர்வு காலை 9.00 மணி முதல் மதியம் 12.00. மணி வரை இடம்பெறவுள்ளதுடன், இதற்கென தலைநகரிலிருந்து வருகை தரும் சிறந்த வளவாளர்களால் தகவல் உரிமை சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளது.
செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கு நிகழ்வின் இறுதியில் சான்றிதழ் வழங்கி வைக்கப்படவுள்ளது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெறவுள்ள இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சார பிரிவின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூவக்கர், அமைச்சர் மனோ கணேஷனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.எம்.றிஸ்கான், சாய்ந்தமருது வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முபாறக், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே, சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நுருல் ஹூதா உமர், பிரதித் தலைவர்களான ஜீ.பிரசாந்தன், எஸ்.அஷ்ரஃப்கான், ரீ.கே.றஹ்மதுல்லாஹ், பிரதி தேசிய அமைப்பாளர் எம்.ஐ.எம்.றியாஸ், பிரதித் செயலாளர் கியாஸ் ஏ. புஹாரி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.