கல்முனையில் போக்குவரத்து மருத்துவ பிரிவு காரியாலயத்தினை திறப்பதற்கு ஹரீஸ் எம்.பி நடவடிக்கை


றியாத் ஏ.மஜீத்-
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் சந்திரசிறி விதானகேவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்குமிடையிலான சந்திப்பு இன்று (19) வியாழக்கிழமை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் இடம்பெற்றது.
அம்பாறை கரையோர பிரதேச மக்களின் நீண்ட காலமாக தேவையாக இருப்பதுடன் மக்கள் நேரடியாகவும் சமூக வலைத்தளத்தினூடாகவும் இக்காரியாலயத்தின் தேவை குறித்து கோரிக்கை விடுத்துள்ளமை பற்றியும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக மக்கள் அம்பாறைக்கு செல்வதால் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் பற்றியும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எடுத்துக்கூறியதுடன் போக்குவரத்து மருத்துவ பிரிவு காரியாலயத்தினை கல்முனையில் திறப்பதற்கான கோரிக்கையினையும் இதன்போது விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர், போக்குவரத்து மருத்துவ பிரிவு காரியாலயத்தினை கல்முனையில் திறப்பதற்கான நடவடிக்கையினை தான் மேற்கொள்வதாக இதன்போது உறுதியளித்துள்ளார்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸூடன் றிப்தி முஹம்மட்டும் கலந்து கொண்டிருந்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -