கல்முனை சாகிரா கல்லூரி, இப் பிரதேச வாழ் முஸ்லிம் மக்களின் கல்வியில் கூடிய பங்களிப்பை ஆற்றும் சிற்பங்களையும் சிற்பிகளையும் உருவாக்கிய பெருமை கல்முனை சாகிரா கல்லூரிக்கே உரித்தானது என்றால் மிகையாகாது. இக்கல்லூரியானது பல வைத்தியர்களையும் பொறியியலாளர்களையும் சட்டத்தரணிகளையும் மற்றும் பல புத்திஜீவிகளையும் உருவாக்கி நாட்டின் பௌதீக வள, மனித வளத்துறைகளை மேம்படுத்துவதோடு அபிவிருத்தியிலும் கூடிய செல்வாக்குச் செலுத்துகின்றது.
இந்நிலையில், அன்மைக்காலத்தில் இக்கல்லூரியில் உள்ள நிருவாக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் மாணவ, ஆசிரயர்களிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளதுடன் ஏனைய பழைய மாணவர்கள் புத்தி ஜீவிகளிடத்தில் கவலையோடு உற்றுநோக்க வேண்டியுள்ளது. இவ்விவகாரம் ஓர் பக்க சார்பற்ற முறையில் மாகாண, வலயக்கல்வி அலுவலகங்கள் செயற்படுவதும் அரசியல் தலையீடு இல்லாமல் இக்கல்லூரிக்கான அதிபர் விவகாரத்தை கைய்யாழ்வதும் எமது கல்வித்தாய்க்கு ஆரோக்கியமானதாகும்.
பாடசாலையை சீரமைக்க முழு அதிகாரம் கொண்ட அதிபரின் செயற்பாட்டை வலியுறுத்தும் சோஷியல் வெல்பெயார் போரம், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் பாடசாலையின் பௌதீகவளங்களையும் முழுவீச்சில் கண்காணிக்கக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பையே வேண்டி நிற்கின்றது.