மருதமுனை நூலக வீதியினை காபர்ட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

அகமட் எஸ். முகைடீன்-
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மனங்களை இணைக்கின்ற 'ரண் மாவத்' வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளின் பேரில் மருதமுனை நூலக வீதியினை காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு இன்று (16) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனை முக்கியஸ்தகர் சட்டத்தரணி அன்சார் மௌலானா, கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். ஹாரீஸ் உள்ளிட்ட பள்ளிவாசல் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -