குறித்த வர்த்தக நிலையங்களில் ” இது நகரசபைக்குச் சொந்தமான பூமி, உள்ளே நுழைவது தடை” என நகரசபை தலைவரின் உத்தரவின் பேரில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு விரைந்த, மினுவான்கொடை பொலிஸ் பொறுப்பதிகாரி, மினுவான்கொடை நகர சபை தலைவர் நீல் ஜயசேகரவை தொடர்புகொண்டு குறித்த பேனர்களை அகற்றுமாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை தாம் வர்த்தக நிலையங்களை இன்றைய தினம் சுத்தம் செய்வதாகவும், நாளைய தினம் பாதிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் எனவும் அப்பிரதேச வர்த்தகர் ஒருவர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.
அதேவேளை நகர சபை தலைவரின் இந்த நாகவடிக்கையால் தமக்கு வர்த்தகம் செய்ய முடியாமல் போகும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.டைலிசிலோன்