கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பயணித்த கார் மீது தாக்குதல்

பாறுக் ஷிஹான்-
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பயணித்த கார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் அல்ஹிலால் வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் அவரது காரை பின்தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இன்று (10) இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதலில் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.எனினும் அவர் பயணம் செய்த கார் சேதமடைந்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன் அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அக்கட்சியில் இளைஞர்களை இணைக்கும் முக்கிய வேலைத்திட்டத்தில் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அம்பாறை மாவட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -