அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு பதுளையில் வரவேற்பு

மினுவாங்கொடை நிருபர்-
தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளதையடுத்து, அமைச்சரை வரவேற்கும் நிகழ்வு ஊவா மாகாண பதுளையில், 5 ஆம் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. பதுளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று முன் தினம் ஆதரவாளர்கள் அமைச்சரை அமோக வரவேற்புடன் வரவேற்றனர். இதன்போது, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், பதுளை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகக் கேட்போர் கூடத்தில் வைத்து, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு கைலாகு கொடுத்து, மலர்மாலை அணிவித்து மகத்தான பெரும் வரவேற்பளித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -